தொடர்ந்தும் நாட்டில் எச்சரிக்கை நிலை : செப்டெம்பரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!!

1183

பயணக்கட்டுப்பாடுகள்..

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனினும், தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் நாட்டில் 70 வீதமான பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதுடன்,

செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும் என கோவிட் தடுப்பு செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.