மண்டை ஓட்டில் சிக்கிய குண்டு 48 ஆண்டுகளுக்கு பின் நீக்கம்!!

296

bullet

சீனாவில் பெண் ஒருவரின் மண்டை ஓட்டிற்குள் சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு 48 ஆண்டுகளுக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த ஷாவோ(62) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது தான், மூக்கு பகுதியில் துப்பாக்கி குண்டு இருந்தது தெரியவந்தது.

இதன்பின் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த மருத்துவர்கள், மேல் உதட்டில் சிறு துளையிட்டு துப்பாக்கி குண்டை அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஷாவோவின் மண்டை ஓட்டுக்குள் புகுந்த குண்டு மூக்கு பகுதியில் இறங்கியுள்ளது என்றும், அந்த குண்டு மூளைக்கு சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியாது எனவும் தெவித்துள்ளனர்.