மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. MH 066 என்ற மலேசியன் விமானம், கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு புறப்பட்டது.
271 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் மின்பக்க இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், இன்று அதிகாலை 3 மணியளவில் ஹொங்கொங் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் விமான நிலையத்திற்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும் விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரையிறக்கப்பட்டுள்ளது.