வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!!

1978

ஆடிப்பிறப்பு..

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் நினைவுரையினை வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியதுடன், மாணவர்களினால் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் பாடப்பட்டதுடன், சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபியும் நினைவு கூரப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம், மஞ்சுளாதேவி, முன்னாள் நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன்,

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.