பாடசாலைக்கு செல்லாத மகனை அடித்துக் கொன்ற தந்தை!!

341

Beatingபாடசாலைக்கு செல்ல மறுத்த மகனை அடித்துக்கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத் மஜீத் கான். ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மனைவி பிரிந்து வாழ்கிறார்.

ஆனால் அவர் மூலம் பிறந்த மகன் சாஜித்(10) என்பவனை மஜீத் கான் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார்.

சில நாட்களாக சாஜித் பள்ளிக்கு செல்வதில்லை என்பதையறிந்த மஜீத், நேற்றிரவு கம்பை எடுத்து கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த சாஜித் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளான்.

அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர்.

தலைக்காயம் பெரியதாக இருந்ததால் முதலுதவி மட்டும் செய்த மருத்துவர், மேல் சிகிச்சைக்காக தானே மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளார். அங்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் சாஜித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த சிவாஜி நகர் பொலிசார் இன்று அதிகாலை அஜீத் மஜீத் கானை கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.