முகக் கண்ணாடித்திரை மட்டுமே அணிவது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல்!!

475


முகக் கண்ணாடித்திரை..



முகக்கண்ணாடித்திரை மட்டுமே அணிவது கோவிட் வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் படுவந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.



கோவிட் வைரஸ் பரவாமல் இருக்க முக்கவசத்தை சரியாக அணிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு மேலதிகமாக ஒரு முகக்கண்ணாடித்திரை பாதுகாப்பு கருதி மட்டுமே அணியப்படுவதாக படுவந்துடுவ சுட்டிக்காட்டியுள்ளார்.




எனவே, ஒரு முகக்கண்ணாடித்திரையை மட்டுமே பொதுவில் அணிவது தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுவதாகும் என்று படுவந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.