41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்து வைத்த தந்தை : நடந்த விபரீதம்!!

1126

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம் வேலூரில் 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒக்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41).

இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய 12ம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு சிறிது நேரத்தில் புகார் வந்தது. அங்கிருந்து அணைக்கட்டு வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் திருமணமான மண மக்களையும், இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

41 வயதுடைய ஒருவருக்கு, 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததற்காக மாணவியின் தந்தை மீதும், மணமகன் சுரேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை பொன்னுசாமிக்கு 40 வயது. அவர் தன்னை விட ஒரு வயது மூத்த ஒருவருக்கு தன மக்களை கட்டிக்கொடுத்த இந்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய அவரது உறவினர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.