தங்கையின் கணவர் செய்த மோசமான செயல் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

617

தமிழகத்தில்..

தமிழகத்தில் தங்கையின் கணவரால் தான் தற்கொலை செய்கிறேன் என வீடியோ வெளியிட்டுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இறந்துள்ளார்.

கைக் குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லி க்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட பிரேதத்தை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் அதிக அளவுக்கு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும்,

தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் ஜோசப்பை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.