2 மாதங்களுக்கு பின்னர்..
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி 2 மாதங்களுக்கு பின்னர் இன்று (25.07.2021) மாலை மணியளவில் புகையிரதம் பயணித்தது.
கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவையின் வடக்கு தொடருந்து வீதி நாளையதினம் கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஒர் புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி இன்று மாலை சென்றடைந்தது.
நாளை தொடக்கம் வடக்கு தொடருந்து வீதியில் அலுவலக புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. காலை 5.15 க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.
இச் சேவையினை ஆரம்பிப்பதற்கான புகையிரதமே இன்று மாலை அனுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்றடைந்திருந்தது.