மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு கணவன் செய்த மோசமான செயல்!!

1660

தமிழகத்தில்..

தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும், நங்கநல்லூரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே கணவர் க.ஞ்சா மற்றும் ம.து அ.ருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், தாய் வீட்டிற்கு சென்று நகை பணம் வாங்கி வருமாறு துன்புறுத்தினார்.

அதுமட்டுமின்றி தன்னை வேலைக்கு செல்லும் படி சண்டை போட்ட அவர், தான் வேலைக்கு சென்ற பின் அதை வைத்து அவருக்கு இரு சக்கர வாகனம் மற்றும் வங்கிக் கடன் பெற்று கொடுத்தேன்.

அதைப் பெற்றுக்கொண்டு சிறிதுகாலம் அமைதியாக இருந்த கணவர் லாரன்ஸ் மீண்டும் ம.து அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்த துவங்கினார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

பின்னர் கணவர் தன்னை சேர்ந்து வாழ அழைத்ததுடன், இன்னும் ஒரு ஆறு மாத காலம் தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும், அதுவரை தன்னை தாய் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனால், கடந்த ஆறு மாத காலம் தனது தாய் வீட்டிலேயே தான் இருந்து வந்தேன். இந்நிலையில், கணவருக்கு வாங்கிகொடுத்த வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து பேசுவதற்காக கணவரையும் மாமியாரையும் சந்திக்க சென்ற போது,

அங்கு திவ்யா என்ற பெண்ணுடன் வந்த கணவர் லாரன்ஸ் மற்றும் மாமியார் ஜெயசீலி ஆகியோர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டனர். அதன் பின் இது குறித்து விசாரித்த போது, திவ்யா என்ற பெண்ணை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

தன்னை அம்மா வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் இது குறித்து புகார் அளித்துள்ளேன். முதல் மனைவி தான் இருக்கும்போதே, தன்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய கணவர் ,மற்றும் மாமியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.