சமன் பந்துலசேன..
வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரமத செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன யாழ்ப்பாணத்தில் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் காலை பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.
இவ் வழிபாட்டு நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.