இலங்கையில் பிரபல நடிகை பொலிசாரால் கைது!!

1759

உபெக்ஷா சுவர்ணமாலி..

இலங்கையின் பிரபல நடிகையான உபெக்ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் விபத்து தொடர்பான எந்தவொரு தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உபெக்ஷா சுவர்ணமாலி என்ற நடிகை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினராகும்.