கொரோனாவை அடுத்து இலங்கையை ஆக்கிரமிக்கும் மற்றுமொரு ஆபத்து!!

1352

டெங்கு..

நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், 10 மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் 16,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் டொக்டர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார்.

பதிவான ஒவ்வொரு 10 டெங்கு நோயாளிகளில் 7 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டு இதுவரை 7 பேர் டெங்கு நோயால் இறந்துள்ளனர் என்று நிபுணர் தெரிவித்தார்.

கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், கம்பாஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கோலை ஆகிய 10 மாவட்டங்கள் டெங்கு நோய்க்கான அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் டெங்கு நுளம்புகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.