உயிரிழந்த பின்னரும் 6 மாதங்களாக தொலைக்காட்சி பார்த்த மூதாட்டியின் சோகக்கதை!!

436

Old Lady

ஜெர்மனியின் பிராங்க் போட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் குடியிருப்போரிடம் அவரைப் பற்றி விசாரித்தார்.

6 மாதங்களாகவே அந்த மூதாட்டியை யாரும் பார்க்கவில்லை என்று அனைவரும் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது வீட்டின் வாசற்கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் நடுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டி ஓடிக்கொண்டேயிருக்க சோபா மீது இரவு ஆடை அணிந்தபடி, அழுகிய நிலையில் அந்த மூதாட்டி பிணமாக கிடந்தார். அவரது அருகே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான நிரல் கிடந்தது.

இதனை வைத்து, அவர் 6 மாதங்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர். சில மாதங்களாகவே அந்த மூதாட்டியின் வீட்டை கடந்து சென்ற வேளையில் துர்நாற்றம் வீசியதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாரும் அதை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.