இந்தியாவின் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கே உள்ளது என, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டாக்டர் மொய்தீன்பிச்சை இந்தியாவில் பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி இவர்களில் யாருக்கு அதிகம் என்று கருத்து கணிப்பு நடத்தினார். கருத்து கணிப்பு முடிவுகளை இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது,
சவுதிஅரேபியா, கட்டார், அரபுநாடுகள், ஏமன், பக்ரைன், அவுஸ்திரேலியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் ஈ.மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 75 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்குதான் பிரதமர் ஆகும் தகுதி அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, 2-வது இடத்தை நரேந்திர மோடியும், 3-வது இடத்தை ராகுல் காந்தியும் பெற்று உள்ளனர்.