வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் வேண்டுகோளிற்கிணங்க வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் நடைமுறையிலிருந்த பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு என்பன கலைக்கப்பட்டு புதிய குழுக்கள் தெரிவு செய்யப்படவுள்ளது.
புதிய பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு என்பனவற்றை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் நாளை (27.03) 2 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எனவே அனைத்துப் பெற்றோரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
-பாஸ்கரன் கதீசன்-