தந்தையும் மகளும் தனித்தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் : அதிர்ந்துபோன குடும்பம்!!

837

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையும் சடலமாக மீட்கப்படட சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

கரிப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீதாம்பரன் என்பவரும் அவரது 31 வயது மகள் ஷாரிகா என்பவருமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மதியம் உணவருந்திய பின்னர் பீதாம்பரத்தின் மனைவி பிரபாவதி என்பவரே மகள் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.

குறித்த தகவலை கணவரிடம் கூற விரைந்த பிரபாவதி படுக்கை அறையில் கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு உறைந்து போயுள்ளார்.

அறைக் கதவு மூடப்படட நிலையில் இருக்க அக்கம் பக்கத்தினரே கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஷாரிகா சில ஆண்டுகளாக உளவியல் சிகிசையில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனிடையே ஷாரிகாவின் தற்கொலை குறிப்பு பொலிஸாரால் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.