திருமணமான சில மாதங்களில் தெரிந்த கணவன் குறித்த உண்மை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

3068

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத்(25). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்னேகா(19). இவர்களுக்குத் திருமணமாகி 8 மாதங்களாகின்றன.

திருமணத்தின் போது பிரமோத்துக்கு 15 சவரன் நகைகள் மற்றும் ரூ 2 லட்சம் வரதட்சணையாக தரப்பட்டது. இந்த நிலையில் ம.துவுக்கு அடிமையான பிரமோத், மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கணவனின் சுயரூபத்தை திருமணமான சில மாதத்தில் அறிந்து அதிர்ச்சியடைந்து அவரிடம் கோபித்துக் கொண்டு, சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்னேகா வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரமோத் தொலைபேசி மூலம் ஸ்னேகாவைத் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். மன உளைச்சலில் இருந்த ஸ்னேகா, தனது அறைக்குள் சென்று பூட்டி கொண்டார்.

காலை வெகுநேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொலிசார் உதவியுடன் கதவை உடைத்து போது ஸ்னேகா தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் பொலிசார் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்னேகாவின் தந்தை ரவி பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து, பிரமோத்திடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.