வவுனியா வேப்பங்குளத்தில் வீதியோரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!!

4756

வேப்பங்குளம்..

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்றை இன்று (04.08.2021) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் அதிகாலையில் பயணித்த பொதுமகன் ஒருவர் குறித்த சடலத்தினை பார்வையிட்டதுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

35 – 45 வயதுக்குட்பட்ட நபரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதுடன் அவரின் மரணம் மற்றும் விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.