வவுனியா பொது வைத்தியசாலையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் : மக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!!

3879

கொரோனா..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதினால் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாட்டின் பல பாகங்கள் உட்பட வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

எமது வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் மாத்திரம் பயன்படுத்திய ஒட்சிசன் தற்போது கொரோனா தொற்றாளர்களுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்த வண்ணமேயுள்ளது. எனினும் எமது வைத்தியசாலையில் தற்போது தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவதன் மூலம் தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க இன்றியமையாததாகும் என தெரிவித்தார்.