வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் சடலம் : விசாரணையில் அம்பலமான 5 ஆண்டு பகை!!

686

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் கும்பளங்கி பகுதியில் சகோதரரை காணவில்லை என்ற புகாருடன் பொலிசாரை ஒருவர் நாடியுள்ளார். இந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேக நபரின் குடியிருப்பு அருகாமையில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் மாயமான ஆன்றனி லாசர் என்பது தெரிய வந்தது. ஆன்றனியும் அவரது சகோதரரும் சேர்ந்து தம்மை துன்புறுத்தி கை உடைத்ததால் ஏற்பட்ட பகையே, கொலைக்கு காரணம் என கைதான பிஜு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கொலைக்கு பின்னர் ஆன்றனியின் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய பின்னர் புதைக்க வேண்டும் என்பது தமது யோசனை என கைதான பிஜுவின் மனைவி ராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மட்டுமின்றி, ஆன்ரனியின் வயிறு பிளந்த பின்னர் உள்ளுறுப்புகளை பைக்குள் நிரப்பி அதை குளத்துக்குள் வீசியதும் ராகி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனைகள் பேசி முடிக்கலாம் என ஆன்றனி என்பவரை கடந்த மாதம் 9ம் திகதி தமது குடியிருப்புக்கு அழைத்துள்ளார் பிஜு.

தொடர்ந்து ஒன்றாக ம.து அ.ருந்திய நிலையில் பிஜுவும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து ஆன்றனியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பிஜுவின் குடியிருப்பு வெளியே, வயக்காட்டில் புதைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.