வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்டன!!

1066

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.

இந்நிலையில் அதன் ஆரம்ப விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்வின் முதன்மை விருந்தினராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார்.

ஆயினும் கோவிட் பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.