வவுனியாவிலிருந்து நுவரெலியாவிற்கு சிறுவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற தனியார் கல்வி நிறுவனத்தினர் : சுகாதாரப் பிரிவினர் விசாரணை!!

2596

சுற்றுலா..

நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தினசரி 75க்கும் மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளது.

அத்துடன் மாகாணத்திற்கிடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆரம்ப கல்வி பாடசாலையினர் சிறுவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என 50க்கு மேற்பட்டவர்களுடன் நுவரெலியா நோக்கி தனியார் பேரூந்தில் இன்று (08.08.2021) அதிகாலை சுற்றுலா சென்றுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து நாடு அபாய கட்டத்தில் உள்ள இந்நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியவர்கள் பொறுப்பற்ற விதத்தில் சுற்றுலாவை ஒழுங்கமைத்து,

சிறுவர்களை அழைத்து சென்றுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமையுடன் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.