கொரோனா..
நாட்டில் மேலும் 124 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 10.08.2021 , 124 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 வயதிற்கு கீழ் 01 மரணமும், 30 முதல் 59 வயது வரையிலான 28 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 95 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.