இலங்கையில் ஒரே நாளில் 160 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

765

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது. 30 வயதிற்கு கீழ் 01 மரணமும்,30 முதல் 59 வயது வரையிலான 35 மரணங்களும்,

60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 124 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதற்கமைய நேற்று உயிரிழந்தவர்களில் 73 பெண்களும், 87 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.