கேரளாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லையாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கை.தாகியுள்ளார்.
கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே பரியாரம் பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீமா அளித்திருந்த முன் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குடியிருப்புக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வரும் 55 வயதான சுரேஷ் பாபு என்பவர் கும்பல் ஒன்றால் தா.க்கப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் முன்னெடுத்த வி.சாரணையிலேயே தா.க்குதல்தாரிகளை ஏ.வியது பெண் என தெரிய வந்தது.
பொலிஸ் அதிகாரியான கணவரின் நண்பரும், அண்டைவீட்டாரும், உறவினருமான சுரேஷ் பாபுக்கு எதிராக 3 லட்சம் ரூபாய் செலவிட்டு வாடகை கொ.லையாளிகளை சீமா ஏ.வியுள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ் பாபு கா.யங்களுடன் த.ப்ப, அவரை தா.க்கிய ஐவர் கும்பல் பொலிசாரால் கை.து செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே சீமா இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்து வருவதாலும், கணவரை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் கூறி வாடகை கொ.லையாளிகளுக்கு பணம் அளித்துள்ளார்.
ஏப்ரல் 18ம் திகதி சுரேஷ் பாபுவின் குடியிருப்புக்கு அ.த்துமீறி நு.ழைந்த நால்வர் கு.ம்பல், கொ.டூரமாக வா.ளா.ல் தா.க்கிவிட்டு மா.யமாகியுள்ளது. தற்போது இந்த வ.ழக்கில் கைதாகியுள்ள சீமா, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.