ஆபாசப் படங்களை ரசிக்கும் குழந்தைகள் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

301

Children

பிரிட்டனில் 2 வயது குழந்தை முதல் இணையத்தில் ஆபாசப் படங்களை ரசித்து பார்க்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தை இணையத்தில் உள்ள ஆபாச காணொளிகள், பாலியல் வன்முறை செயல்களுக்கு தூண்டுகின்றது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சுமார் 30 லட்சம் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்ப்பதாகவும், இதில் 5ல் 2 பங்கு குடும்பத்தினர் இச்செயலை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய இணைய நிபுணர் லூயிர் அப்ரிட்டி கூறுகையில், தங்களது ஆய்வார்கள் திரட்டிய தகவல்களில் குழந்தைகளும் ஆபாசப் படங்களை பார்ப்பது கவலையளிக்கிறது.

ஏனெனில் தற்போது உள்ள குழந்தைகள் கணணி உபயோகிப்பது மட்டுமல்லாமல் ஸ்மாட்போன்ஸ், டப்லட்ஸ் என பல்வேறு சாதனங்களில் இணையதள இணைப்புகளை இணைத்து ஆபாசப் படங்களை கண்டுகளிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதை தடுப்பதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் பெரிதும் போராடி வருகின்றனர் என்றும், மூன்றில் இரண்டு பங்கு குடும்பத்தினர் இதற்கு எந்தவித கட்டுப்பாடும் தெரிவிப்பது இல்லை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.