மறைக்க ஒன்றுமில்லை : எதற்கும் தயாராக இருங்கள்: மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

1266

கொரோனா..

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இதில் மறைக்க ஒன்றுமில்லை. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை.

அதிக நோயாளிகள் அறிவிக்கப்படும் காலம் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-