மனைவியின் சடலத்தின் மீது உயிரை விட்ட அன்புக் கணவர் : நெஞ்சை நெகிழச்செய்த ஓர் சம்பவம்!!

746

Loveகிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவரது சடலத்தின் மீது கணவர் உயிரை விட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (50). இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு தேவி (26), காந்தி (23) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சரஸ்வதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில், உடல் நிலை மோசமாகி சரஸ்வதி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நேற்று நடந்தது. மனைவியின் உடல் அருகே வேடியப்பன் துக்கம் தாங்காமல் அழுத வண்ணம் இருந்தார்.

அப்போது சரஸ்வதியின் உடல் மீது வேடியப்பன் விழுந்து கதறினார். இதன்பிறகு சிறிதுநேரம் வரை அவர் எழுந்திருக்கவில்லை. அருகே சென்று உறவினர்கள் பார்த்தபோது வேடியப்பன் உயிர் இழந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.