வவுனியாவில் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது!!

262

A4கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி காரில் சென்றவர்களிடம் போலி கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதையடுத்து ஐவர் வவுனியா பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் ஒன்றினை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள கல்குனாமடு சந்தியில் வைத்து பொலிஸார் சோதனை செய்தபோது அதில் போலி கைத்துப்பாக்கிகள் 02, கையுறைகள் 10 மற்றும் போலி இலக்க தகடுகள் சிலவும் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த காரில் பயணம் செய்த கொழும்பைச் சேர்ந்த நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.