கொரோனா..
நாட்டில் இன்றைய தினம் மேலும் 892 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
அதற்கமைய, இன்று இதுவரையில் மொத்தமாக 3, 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 365,629 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.