இலங்கையில் 200 ஐ அண்மித்த கொரோனா உயிரிழப்புகள் : ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவு!!

1113

கொரோனா..

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நேற்றைய தினம் (18.08.2021) கொவிட் தொற்றுக்கு இலக்காகி 186 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,790ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகளவிலான உயிரிழப்பு நேற்றைய தினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் கோவிட் தொற்றால் இன்றைய தினம் இதுவரையில் 3,793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து மேலும் 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 373,152 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.