வரலட்சுமி பூஜை..
வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வரலட்சுமி பூஜை வழிபாடுகள் இன்று (20.08) சிறப்பாக இடம்பெற்றது.
இந்துக்களின் விசேட விரதங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்றாகும். சுமங்கலிப் பெண்கள் தமது கணவன்மாருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், அவர்களுக்கு நலம் வேண்டியும் வரலட்சுமி விரத நாளில் அம்மனிடம் வரம் வேண்டி விரதம் இருந்து நூல் கட்டுவர்.
அந்தவகையில் வவுனியாவில் உள்ள அம்மன் ஆலயங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் வரலட்சுமி பூஜை விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலயத்தின் பிரதமகுரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்க விசேட அபிடேகம், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வரலட்சுமி விரத வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது விரதம் இருந்தவர்களுக்கு அம்மன் ஆசியுடன் நூல் கட்டும் நிகழ்வும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றிருந்தது.