வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு!!

325

Soodamani

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் இ.கா.சூடாமணியின் முதல்வருட நினைவுப் பகிர்வு நாளை மறுதினம் (30.03) ஞாற்றுக்கிழமை 3 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்விற்கு நா.பகீரதன்( சூடாமணி நினைவுக் குழு) தலைமை தாங்கவுள்ளார். நினைவுச் சொற்பொழிவுகளை தோழர் சி.கா.செந்தில்வேல் (பொதுச் செயலாளர் -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி) அவர்களும், திரு.கே.கே.அருந்தவராஜா அவர்களும் ஆற்றவுள்ளனர்.

மேலும் கருத்துரைகளை திரு.கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- தேசிய கல்வியல் கல்லூரி,வவுனியா) அவர்களும், திரு.ஆ.நடராஜா (மாக்சிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்) அவர்களும், திரு.பொ.சத்தியநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர் -தேசிய கல்வியல் கல்லூரி,வவுனியா) அவர்களும், திரு.ந.தேவகிருஷ்ணன் (சிறு சுதேசிய உற்பத்தியாளர் கூட்டுறவு அபிவிருத்திச் சங்கம்) அவர்களும், திரு.வே.மகேந்திரன் (தேசிய அமைப்பாளர்- புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி) அவர்களும், திரு.ந.பார்த்தீபன் (சிரேஷ்ட விரிவுரையாளர் -தேசிய கல்வியல் கல்லூரி,வவுனியா) அவர்களும், திரு.த.ஸ்ரீ பிரகாஸ் (ஆசிரியர்-யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை) அவர்களும், திரு.க.ஜெயரணம் (ஆசிரியர், தோழர் சூடாமணியின் இளைய மகன்) அவர்களும் வழங்கவுள்ளதுடன்,

கவிதைச் சமர்ப்பணத்தை இராகலைப் பன்னீர், தி.கலைச்செல்வி, செம்மலர் மோகன், நி.பிரவீனா, செ.மோகன்ராஜ் ஆகியோர் வழங்கவுள்ளதுடன், நன்றியுரையை திரு.டொன்பொஸ்கோ வழங்கவுள்ளார்.

இன் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தோழர் சூடாமணி குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.