கொரோனா..
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு ஆண் மரணமடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு (22.08) குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பட்டானிச்சூர், மூன்றாம் ஒழுங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். அவரது உடலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இன்று பிற்பகல் தோணிக்கல் சிவன்கோவலடிப் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் ஒருவரும் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்திருந்தார்.
மேலும் வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்தார்.
அவர் திடீர் சுகவீனமுற்றநிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
இதேவேளை இன்று மட்டும் வவுனியாவில் 3 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்ததுடன் வவுனியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.