கொரோனா..
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 183 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 76 பெண்களும், 107 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 30 வயதுக்கும் குறைந்த இருவரும், 30 முதல் 59 வயது வரையிலான 45 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட 136 பேரும் மரணித்துள்ளனர்.