கொவிட்..
இலங்கையில் தற்போது தீவிரம் அடைந்து வரும் கொவிட் தொற்றிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இன்று குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளர்களில் 18,769 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றால் 386000இற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 342,159 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 7183 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.