வவுனியா வைத்தியசாலையில்..
வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் என சென்ற நபர் வைத்தியசாலையில் தனது பெயர் விபரங்களை பதிந்து கொண்டு இருந்த போதே வி.ழுந்து ம.ரணமடைந்துள்ளார். இன்று (23.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு மருந்து எடுப்பதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார்.
அவரது உடல் நிலையை அவதானித்த தனியார் மருத்து மனையைச் சேர்ந்தவர்கள் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவ் நபர் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவதற்காக தனது பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டிருந்த போதே கீழே வி.ழுந்து ம.ரணமடைந்துள்ளார்.
ம.ரணமடைந்தவர் வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபராவார்.