கொரோனா..
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 190 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7750 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.