கொரோனா..
வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையின் செயற்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து எதிர்வரும்10 ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.
குறித்த கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தினமும் 150 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றும் 177 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.