இலங்கையில் ஒரே நாளில் 200ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : 8000 ஐ கடந்த மொத்த மரணங்கள்!!

1084

கொரோனா..

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8000தை தாண்டியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (25.08) கொரோனா தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொவிட் தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,353ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.