வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட 4 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!!

2021

வர்த்தக நிலையங்கள்..

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் திறந்திருந்த 4 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் கடைகளைத் திறந்து மரக்கறி மற்றும் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட 4 வர்த்தக நிலையங்கள்,

சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிசாரால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு அறிவித்தல் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.