வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் மூவர் மரணம்!!

1715

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் மூவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

குறித்த மூவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.