திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன் : அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

991

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலிக்கு திருமணமானதை மறைத்த காதலன், தன் நண்பர்களை வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் திகதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது வாட்சப் எண்ணுக்கு, அவரது மனைவியின் ஆ.பாச வீடியோ ஒன்றை மர்ம நபர் ஒருவர் அனுப்பி, மனைவியை திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து அந்த பெண்ணிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, வீட்டின் அருகில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும்,

அவருடன் அடிக்கடி சேர்ந்து டிக்டாக் வீடியோக்களும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், எப்படியாவது கணவரிடம் இருந்து டிக் டாக் காதலியை பிரித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்ட வசந்த், தன்னுடைய அப்பாவி நண்பர்கள் இருவரை அதற்கு பயன்படுத்தியுள்ளார்.

தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனவும், தனது நண்பர்களிடம் வசந்த் புலம்பியுள்ளார். இதை கேட்டு அவரது காதலுக்கு உதவ முன்வந்த நண்பர்கள், பெண்ணுக்கு திருமணமானதை மறைத்து பெண் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது தான் அவர்களுக்கே திருமணம் ஆன விஷயம் தெரியவர, அதுவும் அவரை திருமணம் செய்த கணவரிடமே இப்படி பெண் கேட்கிறோம் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் வசந்தை ஏற்கனவே தேடி வந்த அண்ணா நகர் பொலிசார், அந்த பெண்ணை திருமணம் செய்துகொடுக்க, பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்துவிட்டதாக நண்பர்களை விட்டே பேசவைத்து வசந்தை வரவழைத்துள்ளனர்.

அதனை நம்பி வந்த வசந்தை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறியாமல் நண்பனுக்காக பெண் கேட்க வந்த நண்பர்களை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.