வவுனியா சிறுவர் இல்லம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான உத்தியோகபூர்வமாக சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் மூலம் வவுனியா நெற் இணையத்தளத்திற்கு கிடைக்க பெற்ற செய்தி வருமாறு..
எமது சிறுவர் இல்லம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டியதன் கடமையின் அடிப்படையில் இச்செய்தி வெளியிடப்படுகின்றது. குறிபிட்ட தினத்தில் இடம்பெற்ற இந்த அசௌகரியமான சம்பவத்தை எண்ணி கவலையடைகின்ற அதேநேரம் எமது கட்டுபாடுகளையும் மீறி இச்சம்பவம் இடம்பெற்றதை எண்ணி வேதனையடைகின்றோம்.
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமிகள் எவ்வித பாதிப்புகளுமின்றி போலீசார் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மூலம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஒரு சிறுமி சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களின் பராமரிப்பில் மீளிணைக்கபட்டுள்ளார் என்பதனை நாம் அறியத்தருவதுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறாது என உறுதியளிப்பதுடன் இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளில் நிர்வாகதினராகிய நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.