வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக ஐந்து பேர் மரணம்!!

1827

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (01.09) ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, போகஸ்வேவ, இறம்பைவெட்டி, தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம், இளமருதங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முறையே 60, 54, 71, 72, 58 ஆகிய வயதுகளையுடைய 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த 5 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 25 வயது இளைஞன் ஒருவரும் நேற்று முன்தினம் (31.08) இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று (01.09.2021) இரவு வெளியான பரிசோதனை முடிவுகளில் 237 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.