ஊரடங்கு..
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். இதன்படி மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20.08.2021 அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று 06.09.2021 ம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் மேலும் 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.