இலங்கையில் மேலும் ஊரடங்கு நீடிப்பு : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!!

3032

ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். இதன்படி மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்ட ஊரடங்கு 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20.08.2021 அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று 06.09.2021 ம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் மேலும் 13.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.