குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!

1612

திருப்பதி…

திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால்,

குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால் சுமக்கத் தொடங்கியுள்ளான். அரிசி பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை பேட்டரி ஆட்டோவில் வைத்து தந்தையுடன் சென்று வியாபாரம் செய்து செய்து வருகிறான்.

கண் தெரியாத தங்களுக்கு மகன் கோபால் தான் அனைத்தையும் செய்து வருவதாக பாப்பிரெட்டி கூறியுள்ளார். குடும்ப வறுமையை போக்குவதற்காக, பள்ளிக்கு செல்லும் வயதில் பேட்டரி ஆட்டோ ஓட்டும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.