மீண்டும் 200 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : 30 வயதிற்கு குறைந்த 5 பேர் பலி!!

1435

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (02.09.2021) கோவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 89 பெண்களும், 113 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (01.09.2021) கோவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.