உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான உத்தேச திகதி அறிவிப்பு!!

1862

பரீட்சை..

கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படிதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : 2021 நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை : 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன் க.பொ.த சாதாரண பரீட்சை: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இவை தற்போது முன்மொழியப்பட்ட திகதிகளே எனினும் நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.