பரீட்சை..
கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படிதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : 2021 நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை : 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன் க.பொ.த சாதாரண பரீட்சை: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இவை தற்போது முன்மொழியப்பட்ட திகதிகளே எனினும் நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.